
துர்க்கை அறக்கட்டளை “இயன்றவரை செய்வோம் இருக்கும் வரை”
துர்க்கை அம்மன் ஆலயமானது சுவிஸ் நாட்டிலும், தாயகத்திலும் மக்களுக்கான சேவையை ஆற்றிவருவது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். லுட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தின் துர்க்கை அறக்கட்டளை என்ற உதவியமைப்பினுடாக இயன்றவரை செய்வோம் இருக்கும் வரை என்ற தொனிப்பொருளுக்கு அமைய எமது நேரடி செயற்பாட்டில் வாழ்வாதாரம், கல்வி, மருத்துவம் போன்ற உதவித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.