துர்க்கை அம்மன் அடியவரும், துர்க்கை அறக்கட்டளைக்கு பல உதவிகளைச் செய்துவருகின்ற புங்குடுதீவை பிறப்பிடமாகவும் சுவிஸ் 🇨🇭லுட்சேர்ன் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.திருமதி. சதானந்தன் (சதா) வசந்தமாலா (சக்தி) இவர்களின் செல்வப்புதல்வி இசாலினி துர்க்கை அறக்கட்டளை ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் எருவில் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற திரு. பரணிதரன் கமிஷன் அவரின் தாயின் கடினமான முயற்சியில் படித்து தற்போது பல்கலைக்கழகத்துக்கு செல்ல இருக்கும் நிலையில் அவரின் தேவையினை அறிந்து தாமாகவே முன்வந்து கல்வித் தீபம் திட்டத்தில் இம் மாணவனுக்கு இரண்டு வருடத்திற்கான மாதாந்த கொடுப்பனவாகவும் பல்கலைக்கழகம் செல்வதற்கு மாணவனுக்கு தேவையான பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள்.
இக்கைங்கரியத்தினை வழங்கிய திரு. திருமதி. சதானந்தன் வசந்தமாலா குடும்பத்திற்கு துர்க்கை அறக்கட்டளை சார்பாகவும், செல்வன் கமிஷன் சார்பாகவும் நன்றிகளையும் தெரிவித்து, அவர்கள் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழ துர்க்கை அம்மனை பிராத்திக்கின்றோம்.🛕🙏